முன்னோர்கள் சொல்

-வாசற்படியில் மஞ்சள் பூசச் சொன்னார்கள். அரைத்த மஞ்சளை (மஞ்சள் தூளை) நீர்விட்டு நன்றாக குழைத்து, வாசற்படியிலும் பக்கவாட்டிலும் ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கும் பூசி வைப்பார்கள். மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி. மஞ்சள் பூசப்பட்ட வாசல் படிகளின் வழியே நாம் உள்ளே போகும்போது, நம்மை அறியாமல் மிச்சம் மீதி இருக்கும் கிருமிகளும் அழிந்து போய்விடும். இந்த உண்மையை அறியாமல் நாம் வாசல் படியில் மஞ்சள் நிற வண்ணத்தை அடித்து விட்டோம். மஞ்சளின் மகத்துவத்தை முழுவதுமாக உணர்ந்த முன்னோர்கள், நமது ஆரோக்கியத்திற்காகவே, வாசல் படியில் மஞ்சள் பூசவேண்டும் என்றார்கள். மஞ்சள் பூசப்பட்ட வாசற்படியைக் கடந்து, ஒவ்வொரு முறை நாம் போகும்போதும், கால்களில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். வீட்டுக்குள் நுழையுமுன்பாக மட்டுமல்ல, இரவில் படுக்கப் போகுமுன்னும் கால்களை நன்றாகக் கழுவிக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். கால்களில் ஈரம் இல்லாமல் துணியால் ஒற்றிவிட்டு, இறைவனை ஒருசில விநாடிகள் பிரார்த்தித்துவிட்டு, அதன் பிறகே படுக்க வேண்டும். இவ்வாறு செய்தவன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம். எப்படி? ஏன்? நம் கைகள் கண்ட இடங்களில் படுவதில்லை. ஆனால் கால்களோ, எல்லா இடங்களிலும் பதிகின்றன. அப்படிப் பதியும்போது கால்களில் உள்ள பத்து நகக் கண்களின் மூலமாகக் கிருமிகள் நம் உடலில் நுழைகின்றன. வீட்டிற்குள்ளும் அங்கு, இங்கு என்று நடந்து அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம். அவற்றோடு இரவில் படுத்தால், அது நோய்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியதைப் போல ஆகிவிடும். அதைத் தடுக்கவே இரவில் படுக்கும்போது கால்களைத் தூய்மை செய்து கொண்டு, ஈரமில்லாத காலுடன் படுக்கச் சொன்னார்கள்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :