வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!
வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!!
புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான். இழக்கவும் வைப்பான். காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவன், புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன் கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர் வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது.
அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ் திரம். அதனால்தான் அந்தக் காலத்தில் புதன் கிழமையன்று சாஸ்வரம் செய்து கொள் வார்கள் (குர்வீத புதசோமயோ) ஆண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் குழலால் அது விலக்கப்பட்டாலும் அதன் பெருமை குன்றிவிடாது.
பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள்யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந் துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி.
மேலும் படிக்க:http://goo.gl/Sa7wNb
Comments
Post a Comment