#சூரியகிரகணம்
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், மார்கழி மாதம் 10ம் தேதி,
26.12.19 வியாழன்கிழமை
சூரிய கிரகணம்.
விண்ணில் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8.06
மணிக்கு பகுதி
அளவில் நெருப்பு வளையமாக தெரிய தொடங்கியது.
சூரியன், நிலவு, பூமி என
மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது.
பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். இந்த
அற்புத காட்சிதான் சூரிய கிரகணம். இது எப்பொழுதாவதுதான் நிகழும். நிலவால் சூரியனை
முழுவதுமாக மறைக்க முடியாது. எனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல்
தெரியும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம்
என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு இன்று தோன்றியது. காலை 8 மணியளவில் கிரகணம் தொடங்கியது. தமிழகத்தில்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பகுதி அளவில் தோன்ற தொடங்கியது. அதன்பின்னர் கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய
மாவட்டங்களில் சூரிய கிரகணம் தோன்றியது. சென்னையில் பகுதி அளவு தெரிந்தது.
இன்று காலை 8.06 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது.
தமிழகத்தில் 9.29 மணிக்கு தெளிவாக தெரியும் என விஞ்ஞானிகள்
தெரிவித்தனர். முற்றிலுமாக இந்த சூரிய கிரகணம் முற்பகல் 11.09 மணிக்கு நிறைவடையும்.
இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. 3 தொலைநோக்கிகள் இதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் காலை முதலே பிர்லா கோளரங்கில்
குவிந்துள்ளனர். பொதுமக்களுக்கு விளக்கம் தருவதற்கு சிறப்பு பணியாளர்களையும்
பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
பொதுவாக சாதாரண கண்ணாடிகளைப் பயன்படுத்தி இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்கக்
கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு
பிறகு இந்த அரிய நிகழ்வு தோன்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அடுத்த சூரிய
கிரகணம் 2031 மே 21-ந்தேதி
நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment