#காலபைரவர்
💥💥 காலபைரவர் 💥💥
பைரவர் என்ற பெயருக்கு தன்னை அண்டியவர்களின் எதிரிக்ளுக்கு பயத்தை உண்டாக்கி அண்டியவர்களை கண்ணின் இமை போல காப்பவர் என்பது பொருளாகும். முத்தொழில்களையும் செய்வதால் அவருக்கு பைரவர் என்று பெயர் வந்தது. பாவத்தினை நீக்குபவர் மற்றும் அடியார்களின் பயத்தினை போக்குபவர் என்றும் பொருள் உண்டு. பைரவர் சிவனின் 64 வடிவங்களில் ஒருவர். அந்தகாசூரனை வதம் செய்ய இறைவன் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்பவர்.
பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அதில் ஒருவர் தான் காலபைரவர். காலபைரவர் காலத்தை வென்றவர். காலச்சக்கரத்தினை இயக்குபவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருக்கின்றன. இவரது மூச்சுக்காற்றிலிருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டாகின. இவற்றிலிருந்து தான் மற்ற காலக்கணித முறைகள் தோன்றின.
காலபைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் பயங்கரமானவர். உக்கிரமானவர். ஆனால் தன்னை அண்டியவர்களை கண்ணின் இமை போல் காப்பவர். இவரே கோவில்களின் காவல் தெய்வம். இதனால் இவருக்கு சேத்திரபாலன் என்ற பெயரும் உண்டு. இவரது அதிகார ஆயுதம் திரிசூலம் ஆகும். இது முத்தொழில்களைக் குறிக்கிறது. சிவ வடிவங்களில் பாவத்தை பொடிப்பொடியாக்கும் வடிவம் பைரவரே. இவரது அருளின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண இவரது அருள் மிகவும் முக்கியம்.


காலபைரவர் காலத்தையே மாற்றக் கூடியவர். அதாவது தன்னை அண்டியவர்களுக்காக அவர்களின் பாவ புண்ணிய கணக்கினை அழிக்கும் வல்லமை உடையவர். பாவம் மற்றும் புண்ணிய கணக்கை அழிப்பதன் மூலம் உயிர்களை பிறவி என்னும் கடலிலிருந்து மீட்பவர். பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு என்பது நிச்சயம். எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகிறதோ அப்போது தான் பிறவியிலா பெருநிலை கிட்டும்.
காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன. இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார். பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும். சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே. சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.
காலபைரவரின் வாகனம் நாய் ஆகும். இதற்கு ஞான ஞமலி என்றும் பெயர் உண்டு. நாய்களுக்கு உணவளிப்பதும், அவற்றை பேணி பாதுகாப்பதும் ஒரு வகை பைரவ வழிபாடே ஆகும். காலத்தின் காவல் தெய்வம் என்பதாலேயே இவருக்கு காலபைரவர் என்று பெயர் வந்தது. காலத்தை இயக்கும் பைரவர் காலபைரவர் ஆவார்.
இவ்வுலகில் பாவபுண்ணியங்களை அழித்து பிறவியிலா பெருநிலை அடைய நினைப்பவர்கள் காலபைரவரை தினமும் வழிபடவேண்டும். காலபைரவரை ஒவ்வொரு சிவத்தலத்திலும் காணமுடியும். அவரை வழிபட்டு நமது கர்ம வினைகளை அழித்து பிறவியிலா பெருநிலை பெறுவோம்.
வீட்டில் தினமும் விளக்கேற்றி 27 முறை கீழ்க்கண்ட மந்திரத்தினை நமது பூசையறையில் செபித்து இத்தகைய காலபைரவரை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோம்.
ஓம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பைரவருக்கு ஆசியாவிலேயே பெரிய கோவில் கட்டுமானம் கட்டும்  பணி நடைபெறுகிறது. ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் ,ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது .இக்கோவிலுக்கு சென்று அனைவரும் பைரவர் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஓம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :