இன்று! 25ம் தேதி இரவு தொடங்கி 26/27–12-2019 இந்த இரு நாட்களில்
தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்றாக கூடுகிறது,
நான் அறிந்த வரையில் சில கருத்துக்களை
பகிர்ந்துகொள்கிறேன், முதலில் பதட்டம் தேவையில்லை, பயப்படவும் தேவையில்லை,
26ம் தேதி சூரிய கிரகணம்
ஏற்படுகிறது, இதற்கும் சேர்த்தே இந்த விளக்கம்,
தனுசு ராசியில்- சூரியன்,சந்திரன்,குரு,சனி,புதன் இவர்களோடு “கேது” என ஆறு கோள்கள் இருக்கும்,
இதில் கேதுவின் வல்லமை மிக்க
ஆற்றல், மற்ற ஐந்து கிரகத்தின் ஒட்டு
மொத்த சக்தியையும், மொத்த பலத்தையும் தன்னுள்
ஈர்த்துக்கொள்வார்,
ஆக இங்கு மற்ற ஐந்து கிரகங்களும் “பணயக்கைதி” போல தங்களின் எந்த பலத்தையும்
காட்டவோ, செயல்படுத்தவோ முடியாது,கேதுவே்இங்கு தலைமையாக இருப்பார்.
இந்த ஐந்து கிரகங்களின்
காரகத்தையும்( குணத்தையும்) தன்னகத்தே ஈர்த்து அதன் மொத்த பலன்களையும் கேதுதான்
தருவார்,
இதில் தனுசு ராசியினர் ஒருசில
பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும்,
மனக்குழப்பம், தடுமாற்றம், கையாளும் பொருட்களை தவறவிடுவது, உடைப்பது, தொலைப்பது போன்றவை இருக்கும், ஏமாற்றங்களை சந்திப்பது, விலையுயர்ந்த பொருட்கள் களவு
போவது,வீட்டை சரியாக பூட்டினோமா? போன்ற சந்தேகம் ஏற்படுவது, இது போல பல விசயங்கள் இருக்கும், இது ஏதோ இந்த 26/27
தேதிகளில் மட்டுமே நடக்குமா? என்றால், இல்லை!... தற்போதே அந்த
நிலைமைதான்! எனவே அந்த நாட்களில் ஏதும் பெரிய பிரச்சனை இருக்காது, கவலை வேண்டாம்,
ஆரோக்கியத்தில் பிரச்சனை
இருப்பவர்கள் தங்களின் தினசரி மருந்தை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்,
தந்தையின் உடல்நலத்தில் கவனமாக
இருக்க வேண்டும், சிறு பிரச்சனை என்றாலும்
மருந்துக் கடையில் மருந்து வாங்கித்தராமல், சரியான மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும்,
இந்த கிரக அமைப்பு 17/18-
டிசம்பர் 1963லும் இருந்தது, அப்போதும் மனிதர்கள்
வாழந்துகொண்டுதான் இருந்தார்கள் , இப்போதும் வாழ்ந்துகொண்டுதான்்இருக்கிறார்கள்,இனியும் வாழத்தான் போகிறார்கள்,கிரகங்கள்களின் சஞ்சாரம் என்பது
இயல்பான ஒன்று, நாம் எதையும் மாற்ற முடியாது, என்பதை உணர்ந்தால் பெரிய பிரச்சனை
ஏதும் இல்லை,
26 அன்று சூரிய கிரகணம், மூலம், பூராடம், உத்திராடம், மிருகசீரிடம் , திருவாதிரை நட்சத்திரகார்ர்கள்
கிரகண தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள்,
இவ்வளவ விளக்கத்திற்கு பிறகும், “லேசான பயம் இருக்கு” என்பவர்கள்...!
வசதியானவர்களாக இருந்தால்-
நவகிரக தோஷ சாந்தி ஹோமம் செய்து
கொள்ளுங்கள்,
நவகிரகங்களின் தானியத்தில் செய்த
உணவுகளை நிவேத்தியம் செய்து தானம் தாருங்கள்.(சூரி-கோதுமை, சந்-பச்சரிசி,செவ்-துவரை, புதன்- பச்சைபயிறு, குரு-கொண்டைக்கடலை, சுக்- வெள்ளைமொச்சை, சனி-எள், ராகு- உளுந்து, கேது-கொள்ளு)
வசதி இல்லாதவர்கள்- நவகிரகத்தை 9 முறை சுற்றி வாருங்கள், (பிரதட்சணமாக சுற்ற வேண்டும், அப்பிரதட்சனம் கூடவே கூடாது)
கோவிலுக்கே செல்ல முடியாதவர்கள்-
கோளறு பதிகம் படியுங்கள்.
தீய பலன் நடக்காது, நன்மைகள் அதிகமாகும்.
பொதுவான பலன்- கிரகணத்திற்கு முன்பின் பத்து நாட்களுக்குள்
உலகளவில் பிரபலமான அரசியல் தலைவர் விண்ணுலகம் செல்வார், அல்லது பிரபலமான நபரின் இழப்பு
உண்டாகும்,
அரசு கட்டிடங்கள், அலுவலகங்களில் தீ விபத்து ஏற்படும், சிறார் சிறுமியர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அரசு கட்டிடங்கள், அலுவலகங்களில் தீ விபத்து ஏற்படும், சிறார் சிறுமியர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
Comments
Post a Comment