#வாசியோகம்
💥💥வாசி யோகம்💥💥
வா - என்றால் வாயு (காற்று)
சி - என்றால் அக்கினி,
யோகம் - என்றால் சேர்க்கை .
சுவாசத்தையும் அதனூடே உள்ள அக்கினியையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசியோகம் எனப்படுவதாகும். இந்த சுவாசக்காற்றாகிய வாசியை கொண்டு முறையாக வாசிக்கும் பொழுது தசவாயுக்களை சீரமைத்து பின்ன கதியில் இருந்து, ஏக கதியில் தன்னில்லுள்ள உயிர், மனம், உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.( நோய்கள் = உயிருக்கு = பிறப்பு - இரப்பு, மனம் = விரும்பு-வெருப்பு, உடல் = வாத, பித்த, கபம்).


வாசி உற்பவிக்கும் இடம் எல்லோரும் அறிவார் நவவாசல், அறியாதார் திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே (கண்மணி - சண்முகமணி) அண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனை அளவேயுள்ள இருக்கமான வழியாக செல்லும் சுவாசத்தின் பெயரே ஜீவ - சத்தியாகிய வாயுவாகும். இந்த சுவாசத்தின் வித்தையை கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்லது யோகமாகும்.
வெளிச்சுவாசம் - உள் சுவாசம் இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக் கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக் கொண்டு சுவாசகதியை ( போக்குவரத்தை) கவனியுங்கள். அப்போது வெளிசுவாசம் மாற்றப்பட்டு உள் சுவாசம் (மேல் முச்சு -குறட்டை) வாசிப்பதை உற்று கவனியுங்கள். காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினர் சோர்ந்து பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்திய மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும் தருவாயில் ஆனவம், கன்மம், மாயை, பசி, தாகம், விருப்பு - வெருப்புகள் அகன்று பற்றற்ற நிலையில் உள் சுவாசமான ஜீவ - சக்தியாகிய வாயு மட்டுமே இயங்கி அதாவது ஜீவன் (பிராணன்) - சக்தி ( அபாணன்) சீவனோடு - சக்தி சேர்ந்த நிலை . விடிந்தால் வெளிசுவாசத்திற்கு, தெருவில் கலந்து விளையாடுவதற்கு சக்தியை அளிக்கவல்ல மாமருந்தாகிறது.
சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றி மூல(ம்)வரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஒங்காரப் பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின் நடுனாடி வழியாக ஓடி பத்தாவது வாசலின் உச்சியில் கனல்லேரி ஆவியில் உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினி யாகும்.
நாம் வாழ்வதற்கு உரு- துணையை காணவேண்டும் என்றால் பார்வை இரண்டும் நடுநிறுத்தி பார்க்க, பார்க்க திக்கு எட்டும் ஒன்றாய் சேர்ந்து செவ்வேல் காணும். சசி (அபாணன், சந்திரன், மனம் ), ரவி (பிராணன், சூரியன், ஜீவன்) ஒன்றானால் யோகம் ஆகும்.மணிபூரகம் கண்டால் மவுன மார்க்கம். வாசியோடு மவுனம் வந்தால் சாவுபோகும். இதற்காக நாம் செய்ய வேண்டியது அகங்காரமாகிய நான் என்கின்ற எண்ணங்களை உள்ளடக்கி ஐந்து புலன்களையும் சுட்டறுத்து தூங்காமல் தூங்கவேண்டும். தூங்கி கண்டவன் சிவயோகி,தூக்கத்தை கடந்து ஏழுந்தவன் சிவனாவான்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை