#மயில்இறகு
💥💥 மயில் இறகின் மகத்துவம் 💥💥

நம்முடைய இந்து சமய நெறியில் மிகச் சிறந்த ஞான மூர்த்திகளான இரு தெய்வங்கள் முருகனும் கிருஷ்ணனும். கிருஷ்ணரை நினைத்தாலே ஞாபகத்திற்கு வருவது மயிலிறகும், புல்லாங்குழலும் தான். முருகனின் வாகனம் மயில்.
லட்சுமியும் மயில் மீது மிகுந்த பிரியம் கொண்டவளே.
மயிலைத் தூய்மை மற்றும் பாசிட்டிவ் சக்தியின் அம்சமாக நம் முன்னோர்கள் கருதினார்கள்.
மயில் இறகின் பயன்களைப் பற்றி மந்திர சாஸ்திர நூல்களில் விரிவாகப் பேசுகின்றன. மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது தெரியுமா? ..
அவற்றில் சிலவற்றை உங்களுக்காக இன்று நம் திருமந்திர வகுப்பில் பகிர்ந்து கொள்கிறேன்.
கிருஷ்ணன் தேய்பிறை ரோகிணியில் பிறந்தார் எனவே அவருக்குரிய பஞ்சபட்சி மயில். அவர் தனது பக்ஷிக்குரிய இறகைத் தலையில் எப்பொழுதும் அணிந்திருப்பார். அதனால் அவர் இறங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றியே கண்டார்.
1.மயில் இறகை நம்முடன் வைத்திருந்தால் கர கர என்ற குரலைக் கூட எல்லோரும் விரும்பக்கூடிய வசீகரமானதாக குரலாக மாற்றும்.


2.வீட்டிலிலோ வீட்டு முகப்பிலோ வைப்பது வாஸ்து தோஷம் மற்றும் திருஷ்டி தோஷத்தைப் போக்கும்.
3.மயில் தொகையை காயத்துடன் வைத்து கட்டுப் போடா காயம் விரைவில் ஆறும்.
4.எந்தக் காயத்திக்கும் மயில் இறகைத் தொட்டு தைலம் அல்லது எண்ணெய் போட்டு வர விரைவில் குணமாகும்.
5.சிறு அளவு மயில் இறகை எரித்துச் சாம்பல் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள விஷம் நீங்கும்.
6.சிறு அளவு மயில் இறகை எரித்துச் சாம்பல் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காலை மாலை இருவேளையும் 1 மாதம் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த பலமும்,போக சக்தியும் கிடைக்கும்.
#வாஸ்து தோஷம் நீங்க:-
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து 'ஓம் சோமாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்..
#சனி தோஷம் நீங்க:-
சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு 'ஓம் சனீஸ்வராய நமஹ' என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும்...
#செல்வவளம் அதிகரிக்க:-
அலமாரி நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்...
#எதிர்மறை ஆற்றல்கள் நீங்க:-
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்...
#அலுவலக இடத்தில் செல்வாக்கு பெருக:-
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்...
#பூச்சிகள் வராது தடுக்க:-
மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்...
#அன்யோன்யம் மற்றும் புரிதல் கூட:-
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்...

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை