💥💥இன்று ஓர் ஆலயம்💥💥

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் 

ஆனைமலை

சுவாமி:மாசாணியம்மன்(மயானசயனி)
தீர்த்தம்:கிணற்றுநீர்தீர்த்தம்
தலச்சிறப்பு : உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள் பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.
தல வரலாறு : பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான். ஓருநாள், ஆழியாற்றில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான். வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.


 தலத்தின் பெருமை :

    அருள்மிகு மாசாணியம்மன் சிறப்புக்குக் காரணம் மூலவுரு அமைப்பின் தனித்தன்மையே ஆகும். பொதுவாக மற்ற எல்லா திருக்கோயில்களிலும் தனி அம்பிகையின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். அந்த திருவுருவங்கள் சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்பட்டன. ஆனால் அருள்மிகு மாசாணியம்மன் தோற்றம் அத்தகையதல்ல.
  அம்மன் மயான தேவதையாக 17 அடி நீளத்தில் சயனித்த கோலத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். மயானத்தில் வீற்றிருக்கும் மகாசக்தியினை வணங்குகிற எவரும் பொய் சொல்லவும், வஞ்சகம் நினைக்கவும் முடியாது. அருள்மிகு மாசாணியம்மன் நீதி தேவதையாக விளங்குவதால் நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதிக்கல்லின் மகிமை என்னவென்றால் பில்லி, சூனியம், எந்திரம், ஏவல் போன்ற பெரும் பகையில் பாதிக்கப்பட்டவர்களும் பொருட்கள் திருட்டு போனவர்களும், மிளகாய் அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால் தவறு செய்தோர் தண்டிக்கப்படுவர் என்று நம்புகின்றனர்,
   மிளகாய் அரைத்து நீதி நிறைவேற்றிய பின் தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு நடத்தி மகிழ்வது சிறப்பான காட்சியாகும். இத்திருக்கோயிலில் வேண்டுதல் முறையானது சிறப்பான வழிபாடாகும். பக்தர்களுக்கு தங்கள் வாழ்வில் எந்தெந்த விதமான வேண்டுதல்கள் உள்ளனவோ அதனை ஒரு சீட்டிலே எழுதிக் கொடுத்தால் அதனை அம்மனின் கையிலே கட்டிவிடுவார்கள். அக்கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தி மகிழ்வது திருக்கோயிலின் சிறப்பாகும்.
நடைதிறப்பு : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : தை மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறுகிறது. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.
அருகிலுள்ள நகரம் : பொள்ளாச்சி
கோயில் முகவரி : அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி - 642104, கோயம்புத்தூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 04253 282 337, 283 173.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#அருள்மிகுமாசாணியம்மன்திருக்கோயில் 


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :