இன்று ஓர் ஆலயம்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் 
அரிமழம், புதுக்கோட்டை மாவட்டம்
சுவாமி : முத்துமாரியம்மன்.
தலச்சிறப்பு : மாரி என்றால் மழை.  ஆகையால் மழையைத்தருபவள் எனவும் அழைக்கப் படுகிறாள். மாரியம்மன் அம்மை நோய்  ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனை மழை  வேண்டி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.   பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைக்கப்படுகிறாள்.  பொங்கல் வைத்தல்,  நீர்க்கஞ்சி வார்த்தல், பாற்செம்பு எடுத்தல், கன்மடல் எடுத்தல் போன்றவை சில பொதுவான வழிபாட்டு முறைகளாகும்.


பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது.  முத்துமாரியம்மனை வழிபட்டால் கொடிய நோய்கள்  அகலும்.  ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறுகிறது.  எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக்  கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம் என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி  வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ முத்துமாரியம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரைமாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : புதுக்கோட்டை.
கோவில் முகவரி : அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்,
அரிமழம், புதுக்கோட்டை மாவட்டம்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :