🔥🔥கார்த்திகை விரதம்🔥🔥
இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், ஆடி மாதம் 10ம் தேதி, வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்.
கார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.
முருகனை எண்ணி நோற்கக்கூடிய முக்கிய விரதங்களாக கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம், வெள்ளிக் கிழமை விரதம் ஆகியவை கருதப்படுகின்றன.
இதில் கார்த்திகை விரதம் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும், கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியிலும், வெள்ளிக்கிழமை விரதம் வாரந்தோறும் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று தொடங்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஸ்ரீ விகாரி வருடம், ஆடி மாதம் 10ம் தேதி, வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்.
கார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.
முருகனை எண்ணி நோற்கக்கூடிய முக்கிய விரதங்களாக கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம், வெள்ளிக் கிழமை விரதம் ஆகியவை கருதப்படுகின்றன.
இதில் கார்த்திகை விரதம் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும், கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியிலும், வெள்ளிக்கிழமை விரதம் வாரந்தோறும் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று தொடங்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை, ஆடியில் வரும் ஆடிக்கார்த்திகை, தையில் வரும் தைக்கார்த்திகை ஆகிய மூன்று கார்த்திகை நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விரதம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுப்படுகிறது.
இவ்விரதத்தை வழிபாட்டினை மேற்கொள்வதால் வாழ்வின் எல்லா செல்வங்களும் கிடைப்பதாக் கருதப்படுகிறது. நாரதர், அருணகிரிநாதர், அரிசந்திரன், திரிசங்கு, பகீரதன் உள்ளிட்டோர் இவ்விரதத்தினைப் பின்பற்றி வழிபாடு செய்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
கார்த்திகை விரத வழிபாட்டு முறைகள்
கார்த்திகை விரதமுறையானது கார்த்திகை மாதம் வரும் திருகார்த்திகை தினம் முதல் மேற்கொள்ளப்பட்டு பின் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரத முறையினை மேற்கொண்டு வழிபட்டால் வாழ்வின் உன்னத நிலையை அடையலாம்.
இம்முறையில் கார்த்திகை நட்சத்திரமானது மாலை ஐந்து மணி மேல் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கார்த்திகை தினத்தில் விரதமுறையை மேற்கொள்வோர் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி அன்று நண்பகலில் உணவினை உண்டு இரவில் உண்ணாமல் விரத வழிபாட்டினைத் தொடங்க வேண்டும்.
மறுநாள் கார்த்திகையில் நீராடி முருகனை வழிபட்டு அன்று முழுவதும் விரதமிருந்து தியானம், பாராயணம், கோவில் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
பகலிலும் இரவிலும் உறங்கக் கூடாது. மறுநாள் ரோகிணி அன்று காலையில் நீராடி முருகனை வழிபாடு மேற்கொண்டு உணவு உண்ணலாம்.
மாதந்தோறும் கார்த்திகை அன்று அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பின் பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயசெயல்களில் ஈடுபடாது இருக்க வேண்டும்.
மாலையில் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். இவ்விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பராயணம் செய்யலாம்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment