💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
திருத்தணி🔥🔥
திருத்தணி🔥🔥
சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்
தலவிருட்சம் : மகுடமரம்
தலச்சிறப்பு : ஆறுபடைவீடுகளில் ஒன்றாகும். 365 படிகளை கொண்ட திருத்தணி படிகள் ஓராண்டினை குறிக்கும் அடையாளமாக திகழ்கிறது. நிர்வாகத்தாரால் திருமண மண்டபங்கள்,கருணை இல்லம், நூலகம் மற்றும் கல்லூரி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. திருத்தணிகையில் முருகப் பெருமானைத் தியானித்து சிவபெருமான் பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார். திருக்கோவிலின் வாயிலாக ஆன்மிக கல்வி திட்டம், திருவாசகம், முற்றோதுதல்,தேவாரம், திருப்புகழ் பாராயணம் மற்றும் ஒலி நாடாக்கள் மூலம் நாயன்மார்கள் பாசுரங்களை பரப்புதல் போன்றவைகள் செயல்படுத்தப்படுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம் இத்திருத்தலம்.
திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி ஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும். சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர், பிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை வணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்
தலவிருட்சம் : மகுடமரம்
தலச்சிறப்பு : ஆறுபடைவீடுகளில் ஒன்றாகும். 365 படிகளை கொண்ட திருத்தணி படிகள் ஓராண்டினை குறிக்கும் அடையாளமாக திகழ்கிறது. நிர்வாகத்தாரால் திருமண மண்டபங்கள்,கருணை இல்லம், நூலகம் மற்றும் கல்லூரி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. திருத்தணிகையில் முருகப் பெருமானைத் தியானித்து சிவபெருமான் பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார். திருக்கோவிலின் வாயிலாக ஆன்மிக கல்வி திட்டம், திருவாசகம், முற்றோதுதல்,தேவாரம், திருப்புகழ் பாராயணம் மற்றும் ஒலி நாடாக்கள் மூலம் நாயன்மார்கள் பாசுரங்களை பரப்புதல் போன்றவைகள் செயல்படுத்தப்படுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம் இத்திருத்தலம்.
திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி ஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும். சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர், பிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை வணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் சரவண பொய்கையில் நீராட வேண்டும். தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து, திருநீறு பூசி உத்திராட்சம் போன்ற சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏறவேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை பாடுவது சிறப்பு. மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.
பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும். முருகன் சன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனமும் வழங்கப்படும். இதை உட்கொண்டால் சகலவிதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
சிறப்பான வசதிகள்
சிறப்பான வசதிகள்
தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் அமைந்திருக்கும் தங்க விமானம், கோயிலின் சிறப்பை மேலும் மெருகேற்றியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுக்கு அதிகளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு அமைந்துள்ள இலவச தங்கும் விடுதி, நவீன வசதிகளுடன் கூடிய கோயில் காட்டேஜ் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திருத்தணி முருகனின் அருள் பெற்று செல்கின்றனர்.
சகலமும் தரும் முருகன்
சகலமும் தரும் முருகன்
ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன்மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். முருகப் பெருமானுக்கு உகந்த இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும், மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து பொது ஜனசேவை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜைகள்.காலை 8.00 மணி- 10.00 மணி-மாலை 5.00 மணி.அபிஷேகம்.
திருவிழாக்கள் : டிசம்பர்,ஜனவரி-திருப்புகழ் திருப்படிவிழா, பிப்ரவரி,மார்ச்-ஸ்ரீ வள்ளி திருமணம்,
மார்ச்-1008 சங்காபிஷேகம்,சிவராத்திரி,
ஏப்ரல்,மே-ஸ்ரீ தெய்வானை திருமணம்,
ஜூலை,ஆகஸ்ட்-ஆடிக்கிருத்திகை தெப்பம், அக்டோபர்,நவம்பர்-சஷ்டிப்பெருவிழா.
அருகிலுள்ள நகரம் : திருத்தணி
கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,திருத்தணி-631 209,
திருவள்ளூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 044-27885225
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து பொது ஜனசேவை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜைகள்.காலை 8.00 மணி- 10.00 மணி-மாலை 5.00 மணி.அபிஷேகம்.
திருவிழாக்கள் : டிசம்பர்,ஜனவரி-திருப்புகழ் திருப்படிவிழா, பிப்ரவரி,மார்ச்-ஸ்ரீ வள்ளி திருமணம்,
மார்ச்-1008 சங்காபிஷேகம்,சிவராத்திரி,
ஏப்ரல்,மே-ஸ்ரீ தெய்வானை திருமணம்,
ஜூலை,ஆகஸ்ட்-ஆடிக்கிருத்திகை தெப்பம், அக்டோபர்,நவம்பர்-சஷ்டிப்பெருவிழா.
அருகிலுள்ள நகரம் : திருத்தணி
கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,திருத்தணி-631 209,
திருவள்ளூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 044-27885225
Comments
Post a Comment