#வெள்ளெருக்கு
💥💥 அதிசயங்கள் புரியும்
வெள்ளெருக்கு 💥💥
எருக்கஞ்செடி குடும்பத்தைச்
சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன
எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல்
இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை
கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச
அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.
புதையல், ரத்தினங்கள், சிலைகள், தங்கம் பதுக்கி வைத்திருக்கும்
இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில்
கூறப்பட்டுள்ளது.
அரிதான பொருள்கள் இருக்கும்
இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தோமேயானால்
வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள்
இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “வெள்ளருக்கு_பூக்குமே வேதாளம்_பாயுமே” என்ற பாடலும் சங்க காலத்தில்
பிரபலம்.
எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு
அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளருக்கு அதிஷ்டம் , புதையல் இருக்கும் இடங்களில்
அதிகம் வளரும் என்பதால் , அந்த செடி ஓரிடத்தில் முன் நன்கு
வளர்ந்தால் அதுபோன்ற அதிர்ஷ்டத்தை அங்கு அழைத்து வரும், செடி. நன்கு வளராது வாடினால்
வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை அறியலாம்.
வெள்ளெருக்கு சிவனாருக்கு உகந்தது
என்பர், வெள்எருக்கு செடி வீட்டின் முன்
வைப்பது விஷேசம், அதன் வளர்ச்சி, வீட்டில் செல்வ செழிப்பை
ஏற்படுத்தும். இந்த செடியை தாண்டி பாம்புகள் வராது என்பதால்,வீட்டு வாசலில் வெள்எருக்கு
கட்டாயம் வளர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.
வெள் எருக்கு பொடி சாப்பிட்டால் உடலில் இருக்கும் கிருமிகள்,சாகும். பொதுவாக வெள்ளெருக்குச்
செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருக்ஷம் என்றும்
கூறலாம்.
வெள்ளருக்கு வேர் வேறு பெயர்கள்:
அருக்கன்.ஆள்மிரட்டி என்பன.
இந்த வெள்ளெருக்கு செடியின்
இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான் நினைக்கும் போது இறக்கும்
பாக்கியம் கிடைத்தும் கூட துரியோதனனின் பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம்
சாதித்த நிலையால் வரம் சாபமாகிறது. அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை
எரிக்க சூரியனை கொண்டு எரிக்க சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால் சூரியனின்
ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கஞ்ச்செடி இலையை கொண்டு
தகிக்கலாம் என்று வழி கூறுகிறார்.
அத்தனை சக்தி படைத்தது
எருக்கஞ்ச்செடி.
அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும் வறண்ட
பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து
வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து
காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.
எருக்கன் செடியின் நுனி முதல்
அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை
ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.
இதன் இலை சாம்பல் நிறத்தில்
இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 -
6 செ .மீ. அகலமும் முட்டை
வடிவத்தில் இருக்கும்.
இதில் வெள்ளை மலர்களையுடைய விஷேச
அம்சம் கொண்ட வெள்ளெருக்குதான் சிறந்தது.
வெள்ளெருக்கினை மாந்தீரீக
சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் .
எல்லாமே மருத்துவ குணம் உடையன.
இதை வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்துவிநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.
வெள்ளெருக்கம் பூ சங்கை
பஸ்மமாக்கப் பயன்படுகிறது. வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில்
விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.
வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை
செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.
ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில்
தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளெருக்கு விநாயகர் என பல
இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில்
விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால், அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. தரமான விநாயகர்
பிள்ளையார் பட்டியிலும்,சூரியனார் கோவிலிலும்
கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
அங்கு போக முடியாதவர்கள், உங்களுக்கு நம்பிக்கைக்குரிய
சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர்
ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30
முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில், அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத்
தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம்
அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும்.
இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள்
கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில்
பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.
(ஆமாம்,பண வரவு பல மடங்காக அதிகரிக்கும்)
வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு)
வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர்.
வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது
விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு
செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும்
இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில்
கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில்
தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு
அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில்
இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
எனவேதான் வெள்ளெருக்கு வேரை
எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல்
கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே
வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.
வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு
சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன்
வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள்
கிடைக்கும்.
இதற்கடுத்தபடியாக இடம்புரி
விநாயகர் வினைகளை தீர்க்கக் கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. வலம்புரி
விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க
வல்லவர். பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சேர்ந்தவர்.
இடம்புரி விநாயகர் தீய சக்திகளை
அழிக்கும் வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து சாஸ்திரம் ஆகிய குறைகளுக்காக வைக்கப்படும் விநாயகர்
இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.
வெள்ளை எருக்கு வெள்ளெருக்கு
என்றழைக்கப்படும் இதை ப்ரணவமாக.. விளங்கும் கணபதிக்கு இணையாக கூறுவர்.. உண்மை இதன்
மகிமையை விளக்கிக்கூற முடியாது ....
முறைப்படி இதன் வேரை பூஜை செய்து
வடக்கே உள்ள வேர் சிறப்பு .. தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிந்து கொண்டால் அஷ்ட
சித்திகளையும் அளிக்கும் சக்தி வாய்ந்தது.. இதை சித்தர்கள் அனைவரும்
கையான்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இதன் பாலை கையில் பிடித்து வைக்க
ஒரு நிமிடத்தில் கட்டியாகிவிடும் அதை உருட்டி பல் சொத்தையாக உள்ள இடத்தில்
வைத்துக்கொண்டு எச்சிலை துப்பிவிடவேண்டும்.. இவ்வாறு மூன்று நாளைக்கு செய்ய பல்
சொத்தை அறவே
வராது...
வராது...
இதன் பூ ..50கிராம்..
மிளகு 50கிராம்
இரண்டையும் ஆடாதோடா இலைச்சாற்றினால் அரைத்து பட்டாணி அளவிற்கு உருட்டி நிழலில் காயவைத்து காலை மாலை இரண்டு தேனில் குழைத்து சாப்பிட தீராத ஆஸ்துமா .. சைனஸ்.. டிபி..ஆகிய கொடிய நோய்கள் ஒரே மாதத்தில் ஓடிவிடும்..
மிளகு 50கிராம்
இரண்டையும் ஆடாதோடா இலைச்சாற்றினால் அரைத்து பட்டாணி அளவிற்கு உருட்டி நிழலில் காயவைத்து காலை மாலை இரண்டு தேனில் குழைத்து சாப்பிட தீராத ஆஸ்துமா .. சைனஸ்.. டிபி..ஆகிய கொடிய நோய்கள் ஒரே மாதத்தில் ஓடிவிடும்..
Comments
Post a Comment