#சங்கடஹரசதுர்த்தி
💥💥சங்கடஹர
சதுர்த்தி💥💥
இன்று!
விகாரி
வருடம், ஐப்பசி மாதம் 29ம் தேதி, 15.11.19 வெள்ளிக்கிழமை,
சங்கடஹர சதுர்த்தி. எனவே இந்தநாளில், மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச்
சென்று தரிசனம் செய்யுங்கள். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்!!!
சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி
விசேஷம்!
முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் சஷ்டியும்
கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது!
பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது!
அதேபோல், விநாயகப்
பெருமானை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிக முக்கியமானதொரு நாளாக
அனுஷ்டிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம். அப்போது, பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது!!
சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம். அப்போது, பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது!!
இன்று சங்கடஹர சதுர்த்தியில், மாலை
4.30 முதல் 6 மணி
வரை விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெறும். இந்த 4.30 முதல் 6 மணி
வரை என்பது,
ஞாயிற்றுக்கிழமையைப் பொருத்தவரை, ராகுகால
நேரம். எனவே,
ஞாயிறன்று வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி, ரொம்பவே
கூடுதல் பலன்களை வழங்கக் கூடியது என்பார்கள்!!
இன்றைய தினம், (வெள்ளிக்கிழமை)
சங்கடஹர சதுர்த்தியில்,
மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை
வணங்குங்கள். முடிந்தால்,
அபிஷேகப் பொருட்களை வழங்கி வழிபடுங்கள்.
உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்!!!
உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்!!!
ஸ்ரீ கஜமுக பாத நமஸ்தே...
"
கெளரி நந்தன கஜமுக வதனா
கருணைக்கடலே மகாகணபதியே
கலையா கல்வி கனிந்தே அருள்வாய்
எழுந்தருள்வாய் சித்தி புத்தி கணபதியே ....
ஆற்றங்கரைதனில் உறை ஆனைமுகா
ஆறுமுகன் வேலன் தவத் தமையோனே
அறுபத்து நான்கு கலையும் அருள்வாய்
எழுந்தருள்வாய் சித்தி புத்தி கணபதியே ....
மூஷிக வாஹன மூலப்பொருளே
மூவுலகமும் தொழுதிடும் கஜமுகனே
எதிலும் தடையின்றி ஜெயம் அருள
எழுந்தருள்வாய் விக்ன விநாயகனே !! "
கருணைக்கடலே மகாகணபதியே
கலையா கல்வி கனிந்தே அருள்வாய்
எழுந்தருள்வாய் சித்தி புத்தி கணபதியே ....
ஆற்றங்கரைதனில் உறை ஆனைமுகா
ஆறுமுகன் வேலன் தவத் தமையோனே
அறுபத்து நான்கு கலையும் அருள்வாய்
எழுந்தருள்வாய் சித்தி புத்தி கணபதியே ....
மூஷிக வாஹன மூலப்பொருளே
மூவுலகமும் தொழுதிடும் கஜமுகனே
எதிலும் தடையின்றி ஜெயம் அருள
எழுந்தருள்வாய் விக்ன விநாயகனே !! "
கணபதி
சரணம்🙏
Comments
Post a Comment