#சாஸ்திர #விதிகள்
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥சாஸ்திர விதிகள்💥💥
1* திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமையன்று கிரிவலம் வந்தவர்கள் அஷ்டலெட்சுமி கடாட்சம் பெற்று வாழ்வர்.அதேநேரம் புதன் கிழமையில் கிரிவலம் வந்தவர்கள் சகல கலை அறிவுகளும் எளிதில் உணரப் பெற்று என்றும் இன்புற்று வாழ்வார்கள்.

2*கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ,மலர்களையோ பறித்து வீட்டு வழிபாட்டிற்கோ,ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது.

3*தினமும் காலையில் நித்திரை கலைந்தவுடன் கண் விழிக்கும் முன்னர் வடதிசை நோக்கி அமர்ந்து இரு உள்ளங் கைகளையும் சேர்த்து பத்துமுறை தேய்க்க வேண்டும்.பாவங்கள் தேயும்.பின்னர் இரு உள்ளங் கைகளையும் சேர்த்து விரித்துப் பார்க்க வேண்டும்.விரல்களின் முனையில் லஷ்மியையும்,விரல்களின் மத்திய பாகத்தில் சரஸ்வதியும்,உள்ளங்கை தொடங்குமிடத்தில் கௌரியும் வாசம் செய்கிறார்கள்.எனவே முப்பெரும் தேவியரையும் வணங்கிய பலன் கிடைக்கும்.கல்வி,செல்வம்,மனோபலம் கிட்டும்.



கராக்ரே வஸதே லட்சுமி காரமத்யே சரசுவதி
கரமு லேது கௌ திவ்யாத் ப்ரபாதேகர தரிசனம்

4*பெண்ணின் கர்ப்ப காலத்தில் இராஜஸ (மாமிசம் போன்ற) ஆகாரங்களை உண்டு வந்தால் காமாம்,குரோதம்,கோபம்,மதம் முதலிய கொடுங் குணங்கள் உண்டாகும்.தூக்கம்,சோம்பல்,தவறுதல்,இம்சை செய்தல்,வஞ்சித்தல் முதலிய துஷ்ட குணங்கள் மிகப் பெருகும்.

5*கர்ப்பிணியைப் பழக்கத்தினாலும் உணவினாலும் சாத்வீக முறையில் பயிலுவிப்போமாயின்,உத்தம குணம் நிறைந்த குழந்தைகளே உண்டாகும்.ஆதலால் கர்ப்பிணியானவள் சாத்வீகமான ஆகாரத்தையே புசிக்க வேண்டும்.அக்குழந்தையும் அதனையே உண்டு அவ்வுணர்வை அனுசரித்துச் சாத்வீக குணங்களே அமையப் பெற்று மஹாபக்த சிகாமணியாய் பரோபகார சீலனாய் பார் புகழும் பண்டிதனாய் பிறப்பான்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.




Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை