#ஐப்பசிமாதபௌர்ணமியும் #கிரிவலமும்
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥ஐப்பசி மாத பௌர்ணமியின் தனிச்சிறப்பு💥💥
இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், ஐப்பசி மாதம் 26ம் தேதி,
12.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை பௌர்ணமி.
ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதம் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார்.
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி எத்தனை பதார்த்தங்கள் போட்டாலும், நிரம்பாத பரமசிவனின் கபால திருவோடு அன்னை பிச்சை போட்டவுடன், நிரம்பியதாக புராணங்கள் கூறுகிறது. அதனால் தான் ஐப்பசி மாத பௌர்ணமியில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது.


உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும், ஒரு சேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி பௌர்ணமி விரதமிருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும். அதனால் தான் முழு நிலவு தினங்களில் சிறப்பான வழிபாடு முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு காட்டி இருக்கிறார்கள்.
கிரிவலம் :
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும். கிரிவலம் செல்லும்போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.
ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.
வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.
மலையைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.
தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.
கிரிவலம் தொடங்கும்போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.
கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.


விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.




Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :