#பிறைகாணுதல்
💥💥 பிறை காணுதல் 💥💥
வானில் தோன்றும் மூன்றாம் பிறை
நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை
மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.
*மூன்றாம் பிறை தரிசனம்* !!
*******************************
*******************************
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி
பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு
அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை.
ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற
தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.
காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும்
கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக்
காணவேண்டும் என்று கூறினார்கள்.
மூன்றாம் பிறையை பார்த்தல்
மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும்.
மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.
மூன்றாம்பிறை பிறந்த கதை :
*********************************
*********************************
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான்
சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம்
செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும்
வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான
தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம்
அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில்
27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும்
சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன்
தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.
மூன்றாம் பிறை வணங்குவதால்
ஏற்படும் நன்மைகள் :
***************************************************************
***************************************************************
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு
வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை
தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம்
ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம்
காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை
தெளிவாகும்.
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம்
செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்)
வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை
வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
அனைத்து மதங்களும் போற்றும்
மூன்றாம் பிறை:
******************************************************
******************************************************
மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும்
சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொண்டுள்ளன. அதாவது இஸ்லாம் மதம், ஜைனம், கிறித்தவம், இந்து மதம் என்று எல்லா
மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது .
அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வ ங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை
நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில்
உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும்
ஏற்படும்.
*பிறை பார்ப்பதன் புண்ணியம்*
***********************************
***********************************
வைகை ஆற்றில் வெள்ளம்
பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.
மதுரை மாநகரில் பிட்டு விற்று
வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும்
சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
*திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
*திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.
பிறையைப் பார்த்து வணங்குவது
என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது
பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!
*பிறை பார்க்கும் பயன்*
**************************
**************************
வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து
தரிசிக்க வம்ச விருத்தியாகும்.
மூன்றாம் பிறையைத் தரிசனம்
செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம்
செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத
செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.
அதற்கான முறைகளையும் காண்க:
***************************************
***************************************
ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி
அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல
எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு
முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை
மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று
காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க
வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு
கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி
வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில்
ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில்
காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள், தவறாக புரிந்து கொண்டவர்கள்
காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தர்ம பலம் . மனதிலே அன்பு பலம்
இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து
வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.சூரியனிடமும்.
சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே
கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது .
ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம்
யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை
பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக
மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்,வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை
ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து
பூமியில் விட்டு. தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர
தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே
உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி.
மேக மூட்டமாக உள்ள காலங்களில்
பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6
1/2 மணி முதல் 7
1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை
பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், குறிப்பாக சந்தோஷ மன நிலையில்
பிறையை காண வேண்டும், என்ன மனநிலையில் நாம் பிறையை
காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க
வேண்டும்,அசைவ உணவை விரும்பி உண்ணும்
இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட
பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்,இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி.
சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி
மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி
மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை
தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து
அமையும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும், திருமணம்ஆகாதவர்கள்
பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள்
தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண்
பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம்.
கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.ஓரிரு முறை
தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக
வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு
வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே
கிடைத்து விடும், சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன்
தான் பலன் கிடைக்கும், எனவே இறைவன் மேல் நம்பிக்கை
வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .
Comments
Post a Comment