தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ;
கல்யாணத்தில் தாலி கட்டும் பொழுது சொல்லும் ஹிந்து சமய திருமண மந்திரத்தின் பொருள் பெரும்பாலனவர்களுக்கு தெரிவதில்லை.அதன் பொருள் என்னவென்றால்..,
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!
-என்று புரோகிதர் சொல்வார்,
அதாவது..,
மங்கலத்தின் மறு பெயர் கொண்ட அழகான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து,உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு அல்லது நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் வாழ்வும்,வளமும்நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டிக்கொண்டு இந்த புனிதமான திருமாங்கல்யச் கயிற்றை உனக்கு அணிவிக்கிறேன்.
இந்த உலகே போற்றும் நல்ல மனைவியாக, அனைத்து இன்ப, துன்பங்களிலும்,சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று, நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வோம். என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.
ராசி பலன்கள் மற்றும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் அறிய:http://goo.gl/301erY
Comments
Post a Comment