பிரம்ம ஆலயம் ...
பிரம்பனான் மும்மூர்த்திகள் கோவில், இந்தோனேசியா
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள பிரம்பனான் எனும் இடத்தில் உள்ள மும்மூர்த்திகள் கோவில் 9ம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்து கோவிலாகும். இங்கே உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் மும்மூர்த்திகளான படைப்புக் கடவுளான பிரம்மதேவருக்கும், காக்கும் கடவுளான மகா விஷ்ணுவுக்கும், அழிக்கும் கடவுளான சிவனுக்கும் ஒரே வளாகத்தில் அழகான தனிக் கோபுரங்களுடனான கோவில்கள் அமைக்கப் பட்டு உள்ளன.
கி.பி. 1733 இல் ஜாவா பகுதிக்கு சென்றிருந்த கலோன்ஸ் (Calons) எனும் டச்சுக்காரர், காட்டு மரங்கள் மத்தியில், அடர்ந்த புதர்கள் மறைத்த நிலையில், சிதைவடைந்த நிலையில் இக்கோவிலினை கண்டுகொண்டார்.
Yogyakarta நகரத்தில் இருந்து கிழக்கே 18 km தொலைவில் இருக்கும் இக் கோவில் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் ஒன்றாகும். மேலும் தற்போது இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில் என்பதுடன் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு பெரிய கோவிலுமாகும்.
அதன் உயரமான மற்றும் கூரான கோபுரக் கட்டமைப்பு, ஏனைய இந்து கோவில்களின் பொதுவான கட்டிடக்கலையுடன் ஒத்துப்போகின்றது. சிறு கோபுரத்துடன் கூடிய தனித் தனியான கோவில்களின் மத்தியில் 47m உயர் கோபுரத்தினைக் கொண்ட பெரிய கோவில் கட்டிடத்துடன் கூடியதாக இந்த பாரிய கோவில் வளாகம் அமைந்துள்ளது.
மத்தியில் அமைந்துள்ள பெரிய கோவிலானது அழிக்கும் கடவுளான சிவ மகாதேவாவுக்கானது.
இந்த சிவன் கோவில் ஐந்து அறைகள் கொண்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அஷ்டதிக்குகளிலும் நான்கு சிறிய அறைகள் மற்றும் கோவில் மைய பகுதியில் ஒரு பெரிய முக்கிய அறை (மூலஸ்தானம்) காணப்படுகின்றது.
கிழக்கு அறையுடன் தொடர்புடையதாகக் காணப்படும், பிரம்பனானின் மிகப்பெரிய கோவில் மூலஸ்தானத்தில், மூன்று மீட்டர் உயர சிவன் மகாதேவா சிலை காணப்படுகின்றது. நெற்றியில் மூன்றாவது கண், தலையில் பிறை, கைகளில் சிவ சின்னங்களும், உருத்திராட்சை, திரிசூலம் ஆகியனவும் காணப்படுகின்றன.
தாமரை மலர் போன்ற பீடத்தில் அமைந்துள்ள சிவன் சிலையின் வடக்கு பக்கத்தில் படமெடுக்கும் நாகபாம்பு சிலை உள்ளது.
மற்றைய மூன்று அறைககளில், வடக்கு பக்க அறையில் சிவனாரின் துணையாகிய, அசுரனை அழிப்பவராக காட்சி தரும் துர்க்கை மகிசாசுரமர்த்தனி அம்மனும், மேற்கே உள்ள அறையில் விநாயகர் சிலையும், தெற்கே உள்ள அறையில் அகஸ்திய முனிவரின் சிலையும் காணப்படுகின்றன.
மத்தியில் உள்ள இந்த சிவன் கோவில் வடக்கு பகுதியில் விஷ்ணு கோவிலும் தெற்கில் பிரம்மா கோவிலும் காணப் படுகின்றன. கிழக்குப் பக்கம் பார்த்தவாறு உள்ள இந்த கோவில்களில் ஒரே ஒரு அறை மட்டுமே காணப்படுவதுடன் அங்கே முறையே விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் அமைந்து உள்ளன.
இரு கோவில்களும் 20 மீட்டர் அகலம் மற்றும் 33 மீட்டர் உயரமானவையாக அமைந்து உள்ளன.
இந்தியாவுக்கு வெளியே, இந்தியாவில் இல்லாத வகையில் அமைந்துள்ள இந்த மும்மூர்த்திகள் கோவிலானது இந்து மதம் எவ்வாறு செழித்து வளர்ந்திருந்தது என்பதற்க்கு ஒரு சான்றாக உள்ளது. உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலானது கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அண்மையாக 2012 இந்தோனேசியாவின் பிறிதொரு பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் மேலும் ஒரு சிவன் கோவில் தொகுதி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள பிரம்பனான் எனும் இடத்தில் உள்ள மும்மூர்த்திகள் கோவில் 9ம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்து கோவிலாகும். இங்கே உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் மும்மூர்த்திகளான படைப்புக் கடவுளான பிரம்மதேவருக்கும், காக்கும் கடவுளான மகா விஷ்ணுவுக்கும், அழிக்கும் கடவுளான சிவனுக்கும் ஒரே வளாகத்தில் அழகான தனிக் கோபுரங்களுடனான கோவில்கள் அமைக்கப் பட்டு உள்ளன.
கி.பி. 1733 இல் ஜாவா பகுதிக்கு சென்றிருந்த கலோன்ஸ் (Calons) எனும் டச்சுக்காரர், காட்டு மரங்கள் மத்தியில், அடர்ந்த புதர்கள் மறைத்த நிலையில், சிதைவடைந்த நிலையில் இக்கோவிலினை கண்டுகொண்டார்.
Yogyakarta நகரத்தில் இருந்து கிழக்கே 18 km தொலைவில் இருக்கும் இக் கோவில் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் ஒன்றாகும். மேலும் தற்போது இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில் என்பதுடன் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு பெரிய கோவிலுமாகும்.
அதன் உயரமான மற்றும் கூரான கோபுரக் கட்டமைப்பு, ஏனைய இந்து கோவில்களின் பொதுவான கட்டிடக்கலையுடன் ஒத்துப்போகின்றது. சிறு கோபுரத்துடன் கூடிய தனித் தனியான கோவில்களின் மத்தியில் 47m உயர் கோபுரத்தினைக் கொண்ட பெரிய கோவில் கட்டிடத்துடன் கூடியதாக இந்த பாரிய கோவில் வளாகம் அமைந்துள்ளது.
மத்தியில் அமைந்துள்ள பெரிய கோவிலானது அழிக்கும் கடவுளான சிவ மகாதேவாவுக்கானது.
இந்த சிவன் கோவில் ஐந்து அறைகள் கொண்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அஷ்டதிக்குகளிலும் நான்கு சிறிய அறைகள் மற்றும் கோவில் மைய பகுதியில் ஒரு பெரிய முக்கிய அறை (மூலஸ்தானம்) காணப்படுகின்றது.
கிழக்கு அறையுடன் தொடர்புடையதாகக் காணப்படும், பிரம்பனானின் மிகப்பெரிய கோவில் மூலஸ்தானத்தில், மூன்று மீட்டர் உயர சிவன் மகாதேவா சிலை காணப்படுகின்றது. நெற்றியில் மூன்றாவது கண், தலையில் பிறை, கைகளில் சிவ சின்னங்களும், உருத்திராட்சை, திரிசூலம் ஆகியனவும் காணப்படுகின்றன.
தாமரை மலர் போன்ற பீடத்தில் அமைந்துள்ள சிவன் சிலையின் வடக்கு பக்கத்தில் படமெடுக்கும் நாகபாம்பு சிலை உள்ளது.
மற்றைய மூன்று அறைககளில், வடக்கு பக்க அறையில் சிவனாரின் துணையாகிய, அசுரனை அழிப்பவராக காட்சி தரும் துர்க்கை மகிசாசுரமர்த்தனி அம்மனும், மேற்கே உள்ள அறையில் விநாயகர் சிலையும், தெற்கே உள்ள அறையில் அகஸ்திய முனிவரின் சிலையும் காணப்படுகின்றன.
மத்தியில் உள்ள இந்த சிவன் கோவில் வடக்கு பகுதியில் விஷ்ணு கோவிலும் தெற்கில் பிரம்மா கோவிலும் காணப் படுகின்றன. கிழக்குப் பக்கம் பார்த்தவாறு உள்ள இந்த கோவில்களில் ஒரே ஒரு அறை மட்டுமே காணப்படுவதுடன் அங்கே முறையே விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் அமைந்து உள்ளன.
இரு கோவில்களும் 20 மீட்டர் அகலம் மற்றும் 33 மீட்டர் உயரமானவையாக அமைந்து உள்ளன.
இந்தியாவுக்கு வெளியே, இந்தியாவில் இல்லாத வகையில் அமைந்துள்ள இந்த மும்மூர்த்திகள் கோவிலானது இந்து மதம் எவ்வாறு செழித்து வளர்ந்திருந்தது என்பதற்க்கு ஒரு சான்றாக உள்ளது. உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலானது கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அண்மையாக 2012 இந்தோனேசியாவின் பிறிதொரு பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் மேலும் ஒரு சிவன் கோவில் தொகுதி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
Comments
Post a Comment