தனக்குமேல் தலைவன் இல்லை

தனக்குமேல் தலைவன் இல்லை என்பதனாலேயே கணபதியை, விநாயகர் என்று அழைக்கின்றோம். விக்னேஸ்வரனை வழிபட வினைகள் யாவும் நீங்கும்.

விநாயகப்பெருமானை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றதாகும் பெளர்ணமியை அடுத்த நான்காவது நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தினையே சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவார். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி என கூறப்படுகிறது.

அகங்காரத்தினால் விநாயகரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன் என்றருளியதாக புராணக்கதை நமக்கு கூறுகின்றது.

எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி விரதமிருந்து விநாயகரை வழிபட நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

முடியாதவர்கள் நீராகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :