ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு
அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியாரே சுக்கிரன் ஆகும். நவக்கிரகங்களில் ஒன்றாக உள்ள சுக்கிரனை வெள்ளிக்கிழமையில் வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் உரிய நாளாகும். சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு.
பிருகு மகரிஷின் மகனே சுக்கிரன். மகாலட்சுமியும் பிருகு மகரிஷின் மகளாவார். மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போன்று சுக்கிரனுக்கு பார்கவன் என்றும் ஒரு பெயருண்டு. இருவரும் ஒரே தாய் தந்தையரிடம் அவதரித்ததால் சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் ஆகிறான்.
இந்த சுக்கிரனின் அதிதேவதை இந்திராணியாவாள், பிரத்யதி தேவதை இந்திரனாவான். எனவே இந்த சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள்.
வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி திரி இட்டு விளக்கு ஏற்றுவது நல்லது என்று கூறுகிறார்கள்.
முன்பு ஒரு சமயம் வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் பராசக்தியை வழிபட்டு உலக மக்கள் என் ஆட்சியுள்ள வெள்ளிக்கிழமையில் சக்தி வழிபாடு செய்தால் அவர்களுக்கு நீ அளவற்ற சித்திகளை அள்ளித்தர வேண்டும் என்று கேட்டு அந்த வரத்தைப் பெற்றான் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதனால் வெள்ளிக்கிழமை விரதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகப் பேசப்படுகிறது. சுக்கிரன் மகாலட்சுமியின் சகோதரன் ஆனதால் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு ஸ்ரீ மகாலட்சுமிக்கே மிகச் சிறந்ததாக போற்றப்படுகிறது
பிருகு மகரிஷின் மகனே சுக்கிரன். மகாலட்சுமியும் பிருகு மகரிஷின் மகளாவார். மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போன்று சுக்கிரனுக்கு பார்கவன் என்றும் ஒரு பெயருண்டு. இருவரும் ஒரே தாய் தந்தையரிடம் அவதரித்ததால் சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் ஆகிறான்.
இந்த சுக்கிரனின் அதிதேவதை இந்திராணியாவாள், பிரத்யதி தேவதை இந்திரனாவான். எனவே இந்த சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள்.
வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி திரி இட்டு விளக்கு ஏற்றுவது நல்லது என்று கூறுகிறார்கள்.
முன்பு ஒரு சமயம் வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் பராசக்தியை வழிபட்டு உலக மக்கள் என் ஆட்சியுள்ள வெள்ளிக்கிழமையில் சக்தி வழிபாடு செய்தால் அவர்களுக்கு நீ அளவற்ற சித்திகளை அள்ளித்தர வேண்டும் என்று கேட்டு அந்த வரத்தைப் பெற்றான் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதனால் வெள்ளிக்கிழமை விரதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகப் பேசப்படுகிறது. சுக்கிரன் மகாலட்சுமியின் சகோதரன் ஆனதால் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு ஸ்ரீ மகாலட்சுமிக்கே மிகச் சிறந்ததாக போற்றப்படுகிறது
Comments
Post a Comment